நரை முடி இளைஞர்கள் பகுதி-2
நரை முடி இளைஞர்கள் பகுதி-2 காலை ஆறு மணிக்கு ரெடியாகி, குளியல் பிறகு என முடிவெடுத்து, ஐந்து ரூபாயில் டீ குடித்து, Great Canyon of India என்ற இடத்தை அடைந்த போது வாவ் எனச் சொல்லத் தோன்றியது. நேற்றைய இரவு இருளில் ஒன்றும் தெரியலே. பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, மலையை இரண்டாகப் பிளந்த பென்னாறு ஆறு சுமார் நூறு அடி பள்ளத்தில் ரம்மியமாய் காட்சி அளித்தது. மேகக் கூட்டத்திலிருந்து சூரியனார் சிவப்புப் பந்தாய் ஏழு மணியளவில் வெளி வந்தார்.்நெருப்புக் கோளத்தை வித விதமாய் நண்பர்களுடன் கிளிக்கி முடித்து, அருகிலுள்ள கோட்டைக்குப் பயணம். கோட்டைக்குள்ளே சார்மினாரும்,மசூதியும், கோயிலும் இருந்தன. மிகப் பழைய தோற்றத்துடன். தொல்பொருள் ஆணையம் வசமிருந்தாலும் பராமரிப்பில்லை. அறைக்குத் திரும்பி குளித்து, தயாராய் இருந்த காலை உணவை முடித்து அறையைக் காலி செய்வதற்கு முன் மீண்டும் பள்ளத்தாக்கு சென்று, ராஜி மட்டும் கீழே சென்று படமெடுத்து வந்தான். மீண்டும் பயணம், சுமார் 70 கிமீ பேலம் குகைகளுக்கு (Belum Caves). அங்கே அடைந்த போது நண்பகல் கடந்து வெயில் சுட்டது. குகையை மலைகள் நடுவே கண்கள் தேடின. சுமார் 500 மீ நடந்து, நுழைவுச் சீட்...