Posts

நரை முடி இளைஞர்கள் பகுதி-2

நரை முடி இளைஞர்கள் பகுதி-2 காலை ஆறு மணிக்கு ரெடியாகி, குளியல் பிறகு என முடிவெடுத்து, ஐந்து ரூபாயில் டீ குடித்து, Great Canyon of India என்ற இடத்தை அடைந்த போது வாவ் எனச் சொல்லத் தோன்றியது. நேற்றைய இரவு இருளில் ஒன்றும் தெரியலே. பரந்து விரிந்த பள்ளத்தாக்கு, மலையை இரண்டாகப் பிளந்த பென்னாறு ஆறு சுமார் நூறு அடி பள்ளத்தில் ரம்மியமாய் காட்சி அளித்தது. மேகக் கூட்டத்திலிருந்து சூரியனார் சிவப்புப் பந்தாய் ஏழு மணியளவில் வெளி வந்தார்.்நெருப்புக் கோளத்தை வித விதமாய் நண்பர்களுடன் கிளிக்கி முடித்து, அருகிலுள்ள கோட்டைக்குப் பயணம். கோட்டைக்குள்ளே சார்மினாரும்,மசூதியும், கோயிலும் இருந்தன. மிகப் பழைய தோற்றத்துடன். தொல்பொருள் ஆணையம் வசமிருந்தாலும் பராமரிப்பில்லை. அறைக்குத் திரும்பி குளித்து, தயாராய் இருந்த காலை உணவை முடித்து அறையைக் காலி செய்வதற்கு முன் மீண்டும் பள்ளத்தாக்கு சென்று, ராஜி மட்டும் கீழே சென்று படமெடுத்து வந்தான். மீண்டும் பயணம், சுமார் 70 கிமீ பேலம் குகைகளுக்கு (Belum Caves). அங்கே அடைந்த போது நண்பகல் கடந்து வெயில் சுட்டது. குகையை மலைகள் நடுவே கண்கள் தேடின. சுமார் 500 மீ நடந்து, நுழைவுச் சீட்...

நரை முடி இளைஞர்கள்

  நரை முடி இளைஞர்கள் பயணிக்கனும்னு நினைச்சுட்டா என் பேச்சை நானே கேக்கறதில்லே. இந்த தடவை ஆந்திரா பக்கம் போகலாம்னு இரண்டு இடம் தேர்வு செஞ்சாச்சு. தனியாகவா நணபர்களோடவானு டாஸ் போட்டு, பால்ய சினேகிதர்கள் அசோக், ராஜேந்திரன் வருவதாக முடிவானது. சென்னையிலிருந்து ராஜி, திமலையிலிருந்து அசோக். 13/2 அசோக் மடிவாலாவில் பஸ்ஸில் வந்து இறங்க ஒரு சிறிய குழப்பத்தால் அவர் ஒரு கிமீ நடந்து காருக்கு வர வேண்டியதாயிற்று. குட் டீ மடிவாலாவில் குடிச்சுட்டு கண்டோன்மென்ட் இரயில் நிலையம் சென்ற சில நிமிடங்களில் ட்ரெயின் வரவும், ராஜி எங்களுடன் சேர்ந்து கொள்ள நாங்கள் மூவரானோம். பெல்லாரி ரோடை அடைந்து ஏர்போர்ட் கடந்து பயணித்து ஒரு தாபாவில் மத்திய உணவருந்த நிறுத்தம். ரோட்டிகளும் முட்டை மசாலாவும் உள்ளே போனதும் மீண்டும் பயணம். சுமார் 290 கிமீ பயணம். கூகுள் அண்ணா வழிகாட்டி. தேசிய நெடுஞ்சாலை, ஸ்டேட் நெடுஞ்சாலைனு பயணம் தொடர்ந்தது. இருட்டறதுக்குள்ளே போயிடலாம்னு தப்புக்கணக்கு வேற. பாய்லர் டீ தேடி பல கிமீ பள்ளம் மேடான ரோடுகள்ளே பயணிச்சு, கிருஷ்ணாபட்டினம் நெடுஞ்சாலைப் பிரிவுலே விதவிதமான டீ சுவையோட கடைலே இஞ்சி டீ அருமையா கிடைச்ச...

தெளிவு தோன்றுமா ?

  காளை பூட்டிய ஏரால் உழுத நாட்கள் சிறப்போ கால்சராய் அணியாத கோவணமும் வெற்று உடம்பும் சிறப்போ கற்றது கண்டது காதினில் கேட்டது எல்லாமே சிறப்போ பெற்றது பெரிதாய் நோய்கள் பலவும் வாழ்வினில் சிறப்போ ஆயிரம் அறிவுரை ஆரோக்ய வாழ்விற்கு வகை வகையாய் ஆடைகள் முதலாய் அணிகலன் வரையில் அத்தனை வகைகள் சோதனை போலே கூடவே வேதனை தரும் நோய்களும் சோதித்துப் பார்க்க நேரமும் இல்லை உயிரின் பயம் மாற்றங்கள் அனைத்தும் நல்லதா கெட்டதா பாப்பையா பட்டிமன்றம் சீற்றங்கள் கூட புதிதாய் ஆங்காங்கே புரட்டிப் போட்டுவிட குழப்பம் மனதில் கேள்விகள் ஆயிரம் விடைகளும் பலவாய் குடிப்பதில் சிறந்தது ஊரணி நீரா கேள்வி மனதில் கூட்டிக் கழித்து விடைதேடி வாழ்க்கை ஏடுகள் புத்தகமாய் கூடுவிட்டு ஆவி போகும் முன்னே தெளிவு தோன்றுமா ?

எத்திசை போனாயோ

  நித்தம் நித்தம் உன் நினைப்பு நெஞ்சிலே மோதுதடி குத்தம் உனதில்லே குறுகுறு கண்ணும் குவிந்த உதடுமே சத்தமில்லா தோட்டத்துலே சாயங்கால நேரத்துலே நாமிருந்த நாட்களது கத்த நினைச்சாலும் உதடுகள மூடியது ஞாபகம் இருக்கா முத்தங்க பரிமாறி மூச்சு முட்ட நின்ன கதைகேளு சொத்தே சொந்தமே விரலோட விரல் கோத்த சுகமே மொத்த கதை சொல்ல ஒருபாட்டு போதாது பெண்ணே சுத்த வச்சுப் போனவளே எங்கே நீ காணலியே வத்திய ரத்தம் சுருங்கின தோலு நடையிலே தளர்வு முத்திய உடம்பு ஆனாலும் உன் நினைப்பு போகலேடி எத்திசை போனாயோ யோசிச்சு பெருமூச்சு உனைவந்து சேருமோ எத்தனை நாட்கள் ஏங்கிக் காத்திருக்கேன் எனைவந்து சேர்வாயா

விழித்திரு

  மனித மனம் ஒரு புதையல் இனிது தேடி அலைதல் இயல்பு கனவு பலவும் உலவும் ஆலயம் கற்பனை ஊற்று காலம் கடந்தது வாழ்க்கைச் சக்கரம் சுழல்வது தொடரும் வாடிக்கை உயர்வதும் தாழ்வதும் மாற்றங்கள் வசப்பட வைப்பது நம்மிடம் உள்ளது கசப்பினை மறந்து கன்னலை சுவைக்க உறுதியை நிறுத்தி உள்ளத்தை செதுக்கினால் உனக்கென பாதையை உருவாக்கி பயணிக்கலாம் கணக்கிலா செயல்கள் கண்ணுக்கு அருகினில் இணக்கம் இருப்பின் தேர்வது உன்னிடம் தொலைவில் இருப்பதும் அருகினில் வந்திடும் தொல்லைகள் களைந்து தொடர்வதும் சாத்தியம் விடைகள் தேடியே விடியாத இரவுகள் விடிவெள்ளி கண்டதும் சிவந்திடும் கீழ்திசை விழித்திரு தொடர்ந்திடு வசப்படும் வாழ்க்கை விதியென வீணே முடங்கிடல் வேண்டாம்

மறுபடி பிறப்பின்

  மறுபடி பிறப்பின் எதுவாகப் பிறக்கலாம் மனதிலே தோன்றிய வினாவுக்கு விடையெதுவோ பறவையாய் பறந்து உலகை வலம்வரவா பசும்புல்லாய் பரவி பனியில் நனையவா பாயும் மானாய் குதித்தோடிச் செல்லவா நாயும் நரியும் புலியும் நன்றா காட்டு மரமாய் ஓங்கி வளரவா கானக மயிலாய் தோகை விரிக்கவா நதியாய் மாறி நாடெங்கும் சுற்றவா விதியது உண்டெனில் எதுவாய் பிறப்பது மதியினில் கேள்வி விடைதேடிச் சென்றது மனதில் வந்தது இதற்குப் பதிலாய் மனிதனாய் வேண்டாம் திருந்தாத பிறவி மற்றதாய்ப் பிறந்தாலே வாழ்வினில் அமைதி என்றொரு வாக்கு எங்கிருந்தோ வந்தது எண்ணிப் பார்த்தேன் கூற்று சரிதானோ ?

பெண்மயிலே

  தென்னைமரத் தோப்புக்குள்ளே தெம்மாங்கு பாட்டுப்பாடி பின்னலிடை அசைந்தாட போறவளே பெண்மயிலே என்னைக் கொஞ்சம் பாரடியே கண்ணாலே சொன்ன சொல்லை மறந்தனையோ சிங்காரி வண்ணச் சேலையிலே வடிவான சிலையோநீ எண்ணமெலாம் நானிருக்க நாணமென்ன உனக்கு மாமரக் குயில் பாட்டைப் பாடலியோ தேமதுரத் தமிழோசை நாவினிலே காணலியே கால்கொலுசு சத்தமென்ன தாளமிடும் நடையோ பால்மனசுக் காரியே காரிகையே எங்கேநீ கரும்புத் தோட்டத்திலே கன்னம் சிவந்தாயோ கருங்கூந்தல் பின்னல் இடையாட நடந்தாயோ சோளக் காட்டுக்குள்ளே போனவளே சின்னவளே சோடிசேர நானும் வாரேன் நில்லடியே !